அதிவேக வீதியில் விபத்து – இரு இளைஞர்கள் பலி

279 0

1383019937accidentஅதிவேக வீதியின் காலி – பின்னதுவ வௌியேறும் பகுதியின் நுகதுவ சமிங்ஞை கட்டமைப்புக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள்கள் இரண்டு காருடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் மற்றும் கார் சாரதியும் காலி – கராபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்போது மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் பலியாகியுள்ளனர்.

சடலம் கராபிடிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பிரேதப் பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அக்மீமன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.