இலங்கையர்கள் இருவர் இந்தியாவில் கைது

268 0

45016865போலி கடவுச் சீட்டுக்களை பயன்படுத்தி வெளிநாடு செல்ல முயற்சித்த இரண்டு இலங்கையர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

கல்கத்த சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச வானுர்தித் தளத்தில் வைத்து இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவிற்கு சென்றுள்ளதுடன் போலியான ஆவணங்களை பயன்படுத்தி அங்கு தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், அவர்கள் இருவரும் பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு செல்ல முயற்சித்தபோது கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.