ஊழல்காரர்களை வெளிப்படுத்தும் ஆண்டாக 2017

272 0

wasan12017ஆம் ஆண்டை ஊழல் செய்தவர்களை வெளிப்படுத்தும் ஆண்டாக மாற்றுவதாக ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பினால் செய்யப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் தொடார்பில் தகவல் அறிவதற்காக அவர்கள் நேற்று காவல்துறை நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு சென்றிருந்தனர்.

இதன்போது போது அந்த அமைப்பின் இணைப்பாளர் வசந்த சமரசிங்க இந்தக் கருத்தினை தெரிவித்தார்.

2016 ஆம் ஆண்டு நிறைவடைந்துள்ளது.

திருடர்களை பிடிக்கவந்த அரசாங்கத்தை திருடர்களே பிடித்துக்கொண்டுள்ளனர்.

மூவாயிரம் மில்லியன் ரூபாய்களுக்கும் அதிகம் பெறுமதியான நிதி மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகள் ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் ஊழல்காரர்கள் அரசாங்கத்தில் நுழைந்து சட்டத்தை தமக்கு வேண்டியவாறு மாற்றிக்கொள்ள முயற்சிப்பதாக வசந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.