அரிசி விலையை செயற்கையாக அதிகரிக்க முயற்சி

254 0

ajith-p-pereraசில அரிசி விற்பனையாளர்கள் அரிசியின் விலையை செயற்கையாக அதிகரிக்க முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சத் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் டீசல் மாபியாக்கள் செயற்படுவதை போன்று தற்போது அரிசி மாஃபியாக்கள் செயற்பட ஆரம்பித்துள்ளன.

அரிசி விலை அதிகரிப்பிற்கு அரசாங்;;கத்தின் சார்பில் எந்த தவறுகளும் இடம்பெறவில்லை.

அரிசி மாபியாக்கள் அரிசியின் விலையை செயற்கையாக அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றன.

இவ்வாறான முயற்சிகளுக்கு அரசாங்கம் இடமளிக்காது என அஜித் பி பெரேரா குறிப்பிட்டுள்ளார்.