வில்பத்து தேசிய சரணாலயத்தை அண்மித்துள்ள  மாவில்லு வனப் பகுதி பாதுகாப்பிற்கான அழிக்கப்படுவதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது

262 0

vilpaththu-009வில்பத்து தேசிய சரணாலயத்திலிருந்து 10 கிலோமீற்றர் தொலைவிலுள்ள மாவில்லு வனப் பகுதிக்கு வடக்கே 5425 ஏக்கர் வனம் காணப்படுவதாகவும், அதில் 750 ஏக்கர் வனம் இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த வனப் பகுதி எந்த வகையில் வேறு நபர்களுக்கு வழங்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ள வில்பத்திற்கான முன்னின்று செயற்படும் சூழல் அமைப்பு, அந்த விடயம் வர்த்தமானியூடாக அறிவிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

குறித்த வனப் பகுதியில் யானைகள் உள்ளிட்ட காட்டு மிருகங்கள் வாழ்ந்து வருவதாகவும், வனப் பகுதியில் ஏற்படுகின்ற மாற்றங்களின் ஊடாக விலபத்திற்கு ஏற்படும் பாதிப்பு பாரதூரமானது எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.