ரத்னசிறி விக்ரமநாயக்கவின் பூதவுடல் இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது

274 0

prime-minister-death-29-12-2016முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக அன்னாரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமரின் பூதவுடன் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் அஞ்சலிக்காக நேற்றைய தினம் வைக்கப்பட்டு, நேற்று மாலை மீண்டும் பூதவுடன் அன்னாரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

ஹொரணையிலுள்ள அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பூதவுடலுக்கு நேற்று மாலை முதல் பெருந்திரளானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவின் இறுதிக் கிரியைகள் ஹொரணையில் எதிர்வரும் 31ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

சுகயீனமுற்ற நிலையில் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க, நேற்று முன்தினம் இறையடி எய்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.