இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் மீது கற் பிரயோகம்

261 0

download-1சிலாபம் – புத்தளம் பிரதான வீதியின் பங்கதெனிய ரயில் கடவைக்கு அருகில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் மீது கற் பிரயோகம் நடாத்தப்பட்டமை குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த பஸ் மீதே நேற்றிரவு இவ்வாறு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

வீதியில் நின்று கொண்டிருந்த ஒருவரால் இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கற் பிரயோகத்தில் பஸ்ஸிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.