வடக்கு, கிழக்கில் புத்தர் சிலைகள் மற்றும் விகாரைகள் அமைக்கப்படுவதற்கு எதிராக, நல்லாட்சி அரசாங்கம், எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமை கவலையளிக்கின்றது – சாந்தி சிறிஸ்கந்தராசா

247 0

i3வடக்கு, கிழக்கில் புத்தர் சிலைகள் மற்றும் விகாரைகள் அமைக்கப்படுவதற்கு எதிராக, மைத்திரி-ரணில் நல்லாட்சி அரசாங்கம், எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமை கவலையளிக்கின்றது என்று பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட இந்துமாமன்ற அங்குரார்ப்பண நிகழ்வில் கருத்து தெரிவித்த சாந்தி சிறிஸ்கந்தராசா, வடக்கு, கிழக்கில் புத்தர் சிலைகள் மற்றும் விகாரைகள் அமைக்கப்படுவதற்கு எதிராக, நல்லாட்சி அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமை கவலையளிப்பதாக உள்ளதென்று கூறினார்.

யுத்தத்தின் வடுக்கள் வடபகுதி மக்களை மேலும் பாதிப்புக்குள்ளாகின்றது.சோழர் காலத்தில் எவ்வாறு தென் இந்தியாவில் அறநெறி வளர்க்கப்பட்டதோ அதேபோன்று வடக்கு, கிழக்கிலும் அறநெறி வளர்க்கப்பட வேண்டும்.என்று பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா தெரிவித்துள்ளார்