அகில இலங்கை துறைமுக ஊழியர்கள் சங்கம், கறுப்பு வாரத்தை கடைப்பிடிக்கவுள்ளது

294 0

chennai-port-300x211ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் இலங்கை மற்றும் சீன நிறுவனத்துக்கு இடையில் கைச்சாத்திட யோசனை முன்வைக்கப்பட்டுள்ள ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இலங்கை துறைமுக ஊழியர்கள் சங்கம், கறுப்பு வாரத்தை கடைப்பிடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஜனவரி மாதம் 02ஆம் திகதி கறுப்பு வாரம் ஆரம்பமாவதாக அகில இலங்கை துறைமுக ஊழியர்கள் சங்கத்தின் செயலாளர் சந்திரசிறி மஹகமகே, தெரிவித்துள்ளார்.

கையெழுத்திட தீர்மானித்துள்ள ஒப்பந்தத்தை இரத்துச் செய்யுமாறு, இந்த வாரத்தில் அரசாங்கத்துக்கு பல விதங்களில் அழுத்தம் கொடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.