எல்லை நிர்ணய அறிக்கையை தன்னிடம் கையளிக்குமாறு ரணில் ஆலோசனை

347 0

ranil-1பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற வாரத்தில் எல்லை நிர்ணய அறிக்கையை தன்னிடம் கையளிக்குமாறு எல்லைநிர்ணய ஆணைக்குழுவிற்கு ஆலோசனை விடுத்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத்திற்கான எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையை கட்சி தலைவர்கள் முன்னிலையில் ஆராய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அக்குழுவின் அறிக்கையை தன்னிடம் ஒப்படைப்பதாயின் கட்சி தலைவர்கள் முன்னிலையில் கையளிப்பது சிறப்பாக இருக்கும் ஏனெனில் அப்போதுதான் கட்சி தலைவர்களிடம் அறிக்கை குறித்து ஆராய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எல்லை நிர்ணய குழுவின் அறிக்கையை கையளிப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் எல்லை நிர்ணய ஆணைக்குழு உரிய நேரம் ஒன்றை பெற்றுதருமாறு கோரியிருந்தது.

இதற்கு பதில் வழங்கும் வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறித்த ஆலோசனையை விடுத்துள்ளார்.