புகையிரத திணைக்களத்திற்கு ஐந்து மில்லியன் இலாபம்

264 0

train_4புகையிரத விதி முறைகளை மீறிய குற்றச்சாட்டில், பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட இந்த வருடத்திற்கான அபராத தொகை, ஐந்து மில்லியன் ரூபாவிற்கும் அதிகம்  என்று புகையிரத திணைக்கள பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அனுமதிச்சீட்டு இன்றி புகையிரதத்தில் பயணித்த 1295 பேருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வழக்குத்தாக்கல்களில் 31 இலட்சத்து 36 ஆயிரத்து 298 ரூபா வருமானம் கிடைத்துள்ளதுடன், குறைந்த வகுப்பு ஆசனச்சீட்டை பதிவு செய்து உயர் பயணச்சீட்டில் பயணித்த 346 பேர் மற்றும் புகையிரத கடவையில் யாசகம் கூறியமை தொடர்பில் 35 பேர், சட்ட விரோதமாக புகையிரதங்களில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 35 பேருக்கு எதிராக இவ் வருடம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்கள பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இவ்வாறான சட்ட நடவடிக்கை எதிர்காலத்திலும் இனி மேற்கொள்ளப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.