நாட்டின் பல பிரதேசங்களிலும் இன்றைய தினம் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
கிழக்கு, ஊவா, வடக்கு, வடமத்தி, மத்திய மற்றும் மேல் மாகாணங்களில் மழை அல்லது மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
சில இடங்களில் கடும் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.