மத்திய மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைத்துக்கொள்ள நடவடிக்கை

277 0

teacherமத்திய மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக மத்திய மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மத்திய மாகாணசபைக்கு உட்பட்ட பாடசாலைகளில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களுக்கு பட்டதாரிகள் உயர் தேசிய மற்றும் தேசிய ஆங்கில டிப்ளோமா கற்கை நெறிகளை பூர்த்தி செய்தவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

விஞ்ஞானம், கணிதம், தகவல் தொழில்நுட்பம் சுகாதாரம், உடற்பயிற்சிக் கல்வி, நுண்கலை மற்றும் ஆரம்ப கல்வியை போதிப்பதற்காக சிங்களம் மற்றும் தமிழ் மொழி ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்காக பட்டதாரி ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 25 ஆம் திகதி வரையில் ஏற்றுக் கொள்ளப்படும் என்று மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலளார் தெரிவித்துள்ளார்.

விண்ணப்பங்களை, செயலளார், மத்திய மாகாண கல்வி அமைச்சு, புதிய மாகாணசபை கட்டடத் தொகுதி, பல்வேகல என்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கப்படல் வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை பரீட்சையின் மூலம் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.