கந்தளாய் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி

362 0

download-2தங்க ஆபரணங்களை திருடிக்கொண்டு முச்சக்கர வண்டியில் தப்பிச்சென்ற சந்தேகநபர்களை பொலிஸார் தடுத்து நிறுத்த முற்பட்டபோது, அவர்கள் நிறுத்தாமல் சென்றதையடுத்து, பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு 8.30மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் 4ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் மேலும், இரண்டு சந்தேகநபர்களை கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் தெரவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.