இராணுவ முகாம்களை பாதுகாப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னரே, கண்ணிவெடிகளை தடை செய்யும் அனைத்துலகப் பிரகடனத்தில் இலங்கை அரசாங்கம் கையெழுத்திடும்- கருணாசேன ஹெற்றியாராச்சி

263 0

 

download-1இராணுவ முகாம்களை பாதுகாப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னரே, கண்ணிவெடிகளைத் தடை செய்யும் அனைத்துலகப் பிரகடனத்தில் அரசாங்கம் கையெழுத்திடும் என்று பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி, ஒட்டாவா உடன்பாடு என்று அழைக்கப்படும், கண்ணிவெடிகளைத் தடை செய்யும் அனைத்துலகப் பிரகடனத்தில் 160 நாடுகள் அமைப்புகள் கையெழுத்திட்டுள்ளன.

கண்ணிவெடிகளைத் தடை செய்யும் பிரகடனத்தில் கையெழுத்திடுவதற்கு இலங்கை அமைச்சரவை கடந்த மார்ச் மாதம் அனுமதி வழங்கியிருந்தது.எனினும், பாதுகாப்பு அமைச்சு இன்னமும் அதற்கு அனுமதி வழங்கவில்லை.

இராணுவ முகாம்களை பாதுகாப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னரே, கண்ணிவெடிகளை தடை செய்யும் அனைத்துலகப் பிரகடனத்தில் இலங்கை அரசாங்கம் கையெழுத்திடும்.இந்த உடன்பாட்டில் இலங்கை கையெழுத்திடாமல் இருப்பதற்கும், நல்லிணக்கத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.