உலகத்தின் வீரமிகு தலைவர்களில் பிரபாகரனே முதன்மையானவர் என்று சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.
கிளிநொச்சி பொதுச்சந்தையில் ஏற்பட்ட தீ விபத்தினால் அழிவுக்குள்ளான வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு நட்ட ஈடு வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, இவ்வாறு குறிப்பிட்டார்.
இலங்கையிலும் உலகத்திலும் உள்ள தலைவர்களில் வீரமும், தீரமும் மிக்க முதன்மையான தலைவராக பிரபாகரன் விளங்குகிறார் என அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.
அத்துடன் அரச அதிகாரிகள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை, மக்களுக்குச் சேவைசெய்யும் பொருட்டு திறம்பட பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.