மூத்த அரசியல்வாதியான ரத்னசிறி விக்ரமநாயக்கவை பல தசாப்தங்களாக மக்கள் நேசித்து வந்துள்ளனர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க காலமானதை அடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது டுவிட்டர் தளத்தின் ஊடாக இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.
அவரது பிரிவால் வாடும் அனைவருக்கும் தனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.