சுத்தம்செய்யும் தொழிலாளர்களில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்- பைசர் முஸ்தபா

232 0

faizer-mustaphaசுத்தம்செய்யும் தொழிலாளர்களில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

மாநகர சபைகளில் பணிபுரியும் சுத்தம்செய்யும் தொழிலாளர்களில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்று மாகாண சபைகள் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் சுத்தம்செய்யும் தொழிலாளர்களுக்கு கொடுப்பனவு ஒன்றை வழங்குமாறு நகர ஆணையாளர்களுக்கு அமைச்சர் உத்திரவிட்டுள்ளார்.

அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற மீளாய்வுக்கூட்டத்தில் அமைச்சர் பைசர் முஸ்தபா இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

பொதுமக்களின் சுத்தமான வாழ்விற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் இவர்களது நலன் தொடர்பில் கவனம் செலுத்துவது அரசாங்கத்தின் கடமையாகும் என்றும் அமைச்சர் கூறினார்.

அடிக்கடி பக்றீரியாக்களுடன் சம்பந்தப்பட்ட வேலையில் ஈடுபடும் இவர்களை 3 மாதங்களுக்கு ஒருமுறை வைத்திய பரிசோதனையில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.