வறட்சிக்கு முகங்கொடுப்பதற்கு, ஜனாதிபதி செயலணி ஒன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை-அநுர பிரியதர்ஷன

251 0

6வறட்சிக்கு முகங்கொடுக்கும் திட்டத்தைத் தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணி, 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடவுள்ளது.

வறட்சிக்கு முகங்கொடுக்கும் திட்டத்தை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

வருடத்தின் முதல் காலாண்டுக்குள் ஏற்படப்போகும் வறட்சிக்கு முகங்கொடுப்பதற்கு, ஜனாதிபதி செயலணி ஒன்றை நிறுவுவதற்கு அரசாங்கம், கடந்த 20ஆம் திகதி நடவடிக்கை எடுத்திருந்தது.

அதன்பிரகாரம், திட்டத்தைத் தயாரிப்பதற்கான அமைச்சரவை உப-குழுக்கள் இரண்டும் நிறுவப்பட்டுள்ளன.

குறித்த இரு குழுக்களும், தங்களுடைய யோசனைகளையும் பரிந்துரைகளையும், எதிர்வரும் 03ஆம் திகதி கையளிக்கவுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் கண்காணிப்பின் கீழேயே, இந்த விசேட செயலணி வழிநடத்தப்படவுள்ளது.  கடுமையான வறட்சி ஏற்படுமாயின், நீர் மின்விநியோகத்தை தொடர்ச்சியாக விநியோகம் செய்தல், சுத்தமான குடிநீரை விநியோகம் செய்தல், விவசாயத்துக்கு தேவையான தண்ணீரை விநியோகம் செய்தல் தொடர்பில், நடவடிக்கை எடுக்குமாறு உரிய அமைச்சுகள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு அரசாங்கம் அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.