இராணுவத்தில் இருந்து இதுவரை 07 அதிகாரிகள் அடங்காலாக 4658பேர் உத்தியோக பூர்வமாக இராணுவத்திலிருந்து விலகிக்கொள்வதற்காக விண்ணப்பித்துள்ளனர்.
அனுமதிபெறாமல் விடுமுறை பெறாமல் இருந்த இராணுவ வீரர்கள் இராணுவ சேவையிலிருந்து விலச்செல்வதற்காக வழங்கப்பட்டுள்ள கால எல்லை இம்மாதம் 31ம் திகதி வரை வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த இராணுவப் பேச்சாளர் ரொகான் செனவிரத்ன, 02 உயர் அதிகாரிகள், கடற்படையை சேர்ந்த 16 பேர் அடங்கலாக 424 வீரர்களும், 195 விமானப்படை வீரர்களும் படையிலிருந்து தாமாக விலகிக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.