மதவாச்சி நாவற்குளம் பகுதியில் வாகன விபத்து இருவர் பலி (காணொளி)

429 0

accமதவாச்சி நாவற்குளம் பகுதியில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் வைத்தியர் உட்பட அவரது உறவினர்கள் இருவர் பலியாகியுள்ளனர்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற கப் ரக வாகனமும், வவுனியா பகுதியில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பார ஊர்தியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதிலேயே இவ் விபத்து சம்பவித்துள்ளது.

புத்தளத்தில் வைத்தியராக பணியாற்றும் சிங்கள பெண் வைத்தியரான ரி.எம்.ஏ. சுதேசிகா என்பரும்  அவரது கணவரான முகமது சபுர், மாமாவான சப்ரின் மற்றும் அவரது மனைவி மலீனா ஆகியோர் இன்று அதிகாலை 5.30 மணியளவில்ரும் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருக்கையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது வைத்தியர் மற்றும் அவரது கணவரின் தந்தையான சப்ரி;ன் 53 வயதுடைய கணவரின் தாயார் மலீனா ஆகயோர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர்.

வைத்தியரின் கணவர் முகமது சபுர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ் விபத்து தொடர்பான விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.