கணவரின் கொலை தொடர்பில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு

356 0

n-ravirajமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் மனைவி, தமது கணவரின் கொலை தொடர்பில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளார்.

இந்தக் கொலை வழக்கின் எதிரிகளாக காட்டப்பட்டிருந்த ஐந்து பேரையும் கடந்த வாரம் கொழும்பு மேல்நீதிமன்றம் போதுமான சாட்சியங்கள் இல்லை என கூறி விடுதலை செய்தது.

இந்த நிலையில் குறித்த தீர்ப்புக்கு எதிராக இரண்டு வாரங்களுக்குள் மேன்முறையீட்டை செய்யப்போவதாக ரவிராஜின் மனைவியின் சார்பில் வாதாடும் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த தீர்ப்பு தொடர்பில் ஏற்கனவே தமிழ் அரசியல்வாதிகள் தமது கடும் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது