விசேட நடவடிக்கை 6ஆம் திகதி வரையில் தொடரும் – காவல்துறையினர்.

261 0

_92060651_06மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை கண்டறிவதற்காக காவல்துறையினரால் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கை ஜனவரி 6ஆம் திகதிவரை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நத்தார் தினத்தை முன்னிட்டு இந்த சோதனை நடவடிக்கைகள் கடந்த சில நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மதுபோதையில் வாகனம் செலுத்துவதால் அதிக விபத்துகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பண்டிகை காலம் என்பதால் இந்த நிலைமை மேலும் அதிகரிக்கலாம் என்பதைக் கருத்தில் கொண்டே விசேட சோதனை நடவடிக்கைகளில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இநத்நிலையில், மேற்படி சோதனை நடவடிக்கையானது ஜனவரி மாதம் 6ஆம் திகதி வரை தொடரவிருப்பதாக காவல்துறை தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

புதுவருடத்தை முன்னிட்டு மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை கண்டறிவதற்கான இந்த விசேட சோதனை நடவடிக்கைகள் தொடரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.