வவுனியாவில் கோர விபத்து – மூவர் பலி, ஒருவர் படுகாயம்

286 0

dscn9623வவுனியா ஈரபெரியக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் பலியாகினர்.

இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் மற்றுமொருவர் படுகாயமடைந்து வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாரவூர்தி ஒன்றும் கெப் ரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

சம்பவத்தில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.