திவிநெகும திணைகள அதிகாரிகளுக்கு இதுவரையில் நியமன கடிதங்கள் வழங்கப்படவில்லை.

274 0

610திவிநெகும திணைக்களம் உருவாக்கப்பட்டு மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் எந்தவொரு அதிகாரிகளுக்கும் நியமன கடிதங்கள் வழங்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அகில இலங்கை சமூர்த்தி முகாமையாளர்களின் சங்கம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

இதன் காரணமாக அதிகாரிகள் பலர் வேலைவாய்ப்புகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் புஸ்பகுமார தெரிவித்தார்.