கொத்தணி குண்டுகள் தொடர்பான சர்வதேச பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திட வேண்டும்

249 0

claserநிலக்கண்ணி வெடிகள் மற்றும் கொத்தணி குண்டுகள் தொடர்பான சர்வதேச கொள்கைகளில் கையெழுத்திட அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிலக்கண்ணி வெடி தொடர்பான விசோட நிபுணர் அபேகுணவர்தன இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

அதன் மூலம் யுத்த காலத்தில் கொத்தணி குண்டுகள் பயன்பாடு மற்றும் அது தொடர்பான எழுப்படும் குற்றச்சாட்டுகளுக்கு விரைவில் பதில் கிடைக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கம் இந்த கொள்கையில் இதுவரையில் கையெழுத்திடாமை குறித்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியிடம் வினவப்பட்டது.

அதற்கு பதில் வழங்கிய அவர், இராணுவ முகாம்களின் பாதுகாப்பின் பொருட்டு நிலக்கண்ணி வெடிகள் பயன்படுத்தும் காரணத்தினால் அரசாங்கம் இதுவரையில் அந்த கொள்கை பிரகடனத்தில் கையெழுத்திடவில்லை என குறிப்பிட்டார்.