வடக்கு தொடருந்துக்கு நாசகார முயற்சி – ஒருவர் கைது

258 0

yal-devi-train-at-killinochiவடக்கு தொடருந்து பாதையின் ஸ்ரீவஸ்திபுர தொடருந்து நிலையத்திற்கு அருகில் தொடரூந்து பாதையை மறித்து சுமார் 40 அடி நீளமான மரக்குற்றி ஒன்றை இட்டு, பாரிய விபத்து சம்பவம் ஒன்றை ஏற்படுத்த முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்வம் தொடர்பில் மேலும் பலரை கைது செய்யும் பொருட்டு குற்ற புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சில நாசகார சக்திகளினால் அநுராதபுரம் – ஸ்ரீவஸ்திபுர தொடருந்து நிலையத்திற்கு அருகில் நேற்று முன்தினம் இரவு குறித்த மரக்குற்றி தொடருந்து பாதையில் இடப்பட்டிருந்தது.

இதன்போது இரவு 8.15 அளவில் சென்ற கடுகதி தொடருந்து ஸ்ரீவஸ்திபுர தொடருந்து நிலையத்தை கடந்த நிலையில் குறித்த மரக்குற்றியுடன் மோதுண்டுள்ளது.

எவ்வாறாயினும் தொடருந்து சாரதியின் சாதூர்யமான செயற்பாட்டினால் தொடருந்து பாரிய விபத்தில் இருந்து தடுக்கப்பட்டதாக தொடருந்து கட்டுப்பாட்டு மையம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நாசகார வேலையின் காரணமாக ஒரு வேளை தொடருந்து தடம்புரண்டிருந்தால் பாரிய விபத்து ஏற்பட்டிருக்கும் என தொடருந்து பொதுமுகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவித்தார்.