தனியார் ஊடங்கள் எதற்கும் தகவல்களை வழங்க வேண்டாம் என நான் உத்தரவிடவில்லை

258 0

103813539pujithதனியார் ஊடங்கள் எதற்கும் தகவல்களை வழங்க வேண்டாம் என தாம் உத்தரவிடவில்லை என காவல்துறைமா அதிபர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. காவல்துறையின் ஊடக பிரிவு எந்தவொரு தனியார் ஊடகங்களுக்கும் மின்னஞ்சல்கள் மூலம் செய்திகளை கடந்த பல நாட்களாக விடுக்கவில்லை.

இந்தநிலையில், தனியார் ஊடகங்களுக்கு செய்திகளை அனுப்ப வேண்டாம் என காவல்துறைமா அதிபர் பணிப்புரை விடுத்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இதனை மறுத்துள்ள காவல்துறைமா அதிபர், தாம் அவ்வாறு எந்த பணிப்புரைகளையும் விடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.