2016ஆம் இலங்கை இந்திய உறவில் வளர்ச்சி

244 0

15-1463264498-modisrisena2016ஆம் ஆண்டில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பரஸ்பர தொடர்புகள் உயர்மட்டத்தில் விருத்தி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈழத் தமிழர்களின் பிரச்சினையை மையப்படுத்தி, 1980 முதல் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ராஜதந்திர உறவில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்திருந்தன.

எனினும் 2015ஆம் ஆண்டில் இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை அடுத்து, இந்த விடயத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கு சான்றாக இரண்டு நாடுகளுக்கும் இடையில் பல்வேறு உடன்படிக்கைகள் கைச்சாத்தாகியுள்ளன.

எவ்வாறாயினும், இலங்கை இந்திய மீனவர்கள் விடயம், எட்கா உடன்படிக்கை மற்றும் சீனாவின் ஆதிக்கம் போன்ற விடயங்களில் தீர்வு எட்டப்படாத நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.