இலங்கை அகதிகளுக்கு உதவ அமெரிக்கா கோரிக்கை

285 0

nowwow_005தாய்லாந்தில் இருந்து நாடுகடத்தப்படவுள்ள இலங்கை அகதிகள் குடும்பத்துக்கு உதவி வழங்குமாறு, அமெரிக்காவின் விசில் ப்ளோவரான எட்வர்ட் ஸ்னோவ்டன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு திணைக்களத்தின் இரகசியத் தகவல்களை வெளியிட்டதை அடுத்து, அமெரிக்காவில் இருந்து வெளியேறிய எட்வர்ட் ஸ்னோவ்டன் ஹொங்கொங்கில் தங்கி இருந்த போது, குறித்த குடும்பமே அவருக்கு அடைக்கலம் வழங்கியது.

எனினும் குறித்த குடும்பத்தினர் அகதி அந்தஸ்த்துக்கான ஆவணங்களை உரிய காலத்துக்குள் வழங்க தவறியதால், அவர்கள் நாடுகடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்த நிலையில் அவர்களை நாடுகடத்தாவண்ணம் உதவிகளை வழங்குமாறு, ஹொங்கொங்கில் உள்ள தமது டுவிட்டர் நண்பர்களிடம் எட்வர்ட் ஸ்னோவ்டன் கோரிக்கை விடுத்துள்ளார்.