திருமலையில் 42 ஆயிரம் ஏக்கர் பயிர் நிலம் நாசம்

286 0

image5திருகோணமலை மாவட்டத்தில் 42 ஆயிரம் ஏக்கர் நெல் மற்றும் உப உணவு பயிர் செய்கை மழையின்றி பாதிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்ட விவசாய விரிவாக்கல் பிரதிப் பணிப்பாளர் எம்.குகதாஸன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக விவசாயிகளுக்கு மிக மோசமான பாதிப்பை ஏதிர்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்பார்த்த அளவு பருவமழை கிடைக்காமற்போனதால் விவசாயச் செய்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக நெல் உட்பட உப உணவுகளான சோளம், நிலக்கடலை என்பனவும் அழிவடையும் நிலையை எதிர்நோக்கியுள்ளன.

இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உலர் உணவை; வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.