2020ஆம் ஆண்டில் தனியாக ஆட்சி ஒன்றை உருவாக்குவதற்கு அரசியல் ரீதியாக தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.
அக்குரஸ்ஸ பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கட்சியின் ஊடக பேச்சாளர் டிலான் பெரேரா இதனை தெரிவித்தார்.
அரசாங்கத்தில் இருக்கின்ற காரணத்தினால் ஐக்கிய தேசிய கட்சியினர், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினருக்கு பிரச்சினையாக மாறியுள்ளனர்.
ஒன்றிணைந்த எதிர்கட்சியினரை கூட தூற்றாத அளவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினரை தூற்றுகின்றனர்.
இந்தநிலையில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழுவின் தீர்மானம் ஒன்றிற்கு அமையவே அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றோம்.
தேசிய அரசாங்கம் நிலையானதல்ல.
2020ஆம் ஆண்டு ஆகின்றபோது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தனியான ஆட்சியை உருவாக்கும் எனவும் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.