உதம்விட சமரே என்ற புனைப்பெயரில் அழைக்கப்படும் பாதாள குழு உறுப்பினர் ஒருவர் வியாங்கொட தொடரூந்து நிலையத்திற்கு அருகில் நேற்று சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.
அவருடம் இருந்த மற்றுமொருவர் படுகாயமடைந்தார்.
காயமடைந்தவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கெப் ரக வாகனத்தில் வந்தவர்களால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.