இலங்கையில் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகளை திறக்க சீனா நடவடிக்கை

288 0

china-hacker-620x330_mini-720x480ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட பல பகுதிகளை மையப்படுத்தி மேற்கொள்ளப்படும் முதலீட்டுகள் ஊடாக இரண்டாயிரத்து 500 தொழிற்சாலைகள் இலங்கையில் அமைக்கப்படும் என சீனா தெரிவித்துள்ளது.

சீன அரசாங்கத்தின் சர்வதேச விவகாரங்கள் தொடர்பான உதவி ராஜாங்க அமைச்சர் டிச் என்யோன்கே இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கையின் 3 பிரதேசங்களில் சகல வசதிகளையும் கொண்ட தொழிற்சாலைகள் மூன்றையும் அமைக்க சீனா இணக்கம் வெளியிட்டுள்ளதாக அவர் குறிப்பட்டார்.

சீன முதலீடு காரணமாக சுமார் 5 லட்சம் தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள முடியும் என ஆளும் அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.