இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் மஹிந்த அமரவீர இதற்கான பணிப்புரையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நத்தார் தினம், புதுவருட பிறப்பு என்பவற்றை முன்னிட்டு நல்லெண்ண அடிப்படையில், அனைத்து மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், மீனவர்கள் மாத்திரமே விடுவிக்கப்படுவார்கள் எனவும் அவர்களின் படகுகள் விடுவிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்படுகிறது.