நாட்டுக்கு மாத்திரமின்றி உலகத்திற்கும் சமாதானம் தேவை – ஜனாதிபதி

207 0

janathiநத்தார் தினத்தன்று அனைத்து இன மக்களும், ஒற்றுமை, சமாதானம் மற்றும் சகோதரத்துவத்துடன் வாழும் நாட்டை கட்டியெழுப்ப ஒன்றாக கைகோர்க்க வேண்டுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சிறப்பு நத்தார் தின விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கோரிக்கையினை விடுத்தார்.

எமது நாட்டுக்கு மட்டுமன்றி முழு உலகத்திற்கும் சமாதானம் தேவைப்படுகின்றது.

அனைத்து மதங்களும் கூறும் சமாதானம் சகோதரத்துவம் மற்றும் பொறுமைகாக்கும் சமூகமொன்றை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.