ஐக்கிய தேசிய கட்சியை வெற்றிப்பெறச் செய்வதன் பொருட்டே ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை குறிப்பிட்டுள்ளார்.
வலஸ்முல்ல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசிய கட்சியை வெற்றிப்பெற வைக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அந்தவகையிலேயே, ஸ்ரீலங்கா மக்கள் முன்னணி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.