மட்டக்களப்பு பிரதான வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்திற்குமுன்னால் உள்ள மஞ்சல்கோட்டில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று இரவு கொழும்பு நோக்கி சென்ற தனியார் பேரூந்து ஆலயத்திற்கு முன்னால் துவிச்சக்கர வண்டியில் வீதியை கடக்க முற்பட்டவர் மீது மோதி; சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்ட நிலையில் உடனடியாக அவர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டபோதிலும் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்ததாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் மாங்காட்டை சேர்ந்த சிவகுரு ரமேஸ் வயது 36வயது என்பவர் என களுவாஞ்சிகுடிபொலிஸார் தெரிவித்தனர்.இந்நிலையில் களுவாஞ்சிகுடி பொலிசார் தனியார் பேரூந்து சாரதியை கைது செய்ததுடன் இவ் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணையையும் ஆரம்பித்துள்ளனர். குறித்த விபத்து இடம்பெற்ற காணொளி கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

