ஏழுமலையானை தரிசிப்பதற்காக பிரதமர் ரணில்

253 0

ranil-india-visit-21-12-2016இந்தியா திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நண்பகல் 1.55 மணியளவில் இந்தியா நோக்கி பயணித்தார்.பிரதமருடன் அவரது மனைவி உட்பட மேலும் இரு பிரதிநிதிகளும் இந்த விஜயத்தில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் விஜயத்தை மேற்கொண்டு இந்தியா செல்லும் பிரதமர் நாளை திருப்பதி தேவஸ்தானத்தில் சிறப்புப் பூஜை வழிபாடுகளில் கலந்து கொள்ளவுள்ளார்.