ஜப்பான்- இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு கலந்துரையாடல்(படங்கள்)

271 0

army-meeting-21-12-2016-1ஜப்பான்- இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு கலந்துரையாடல் கொழும்பில் உள்ள இலங்கை பாதுகாப்பு அமைச்சில் நேற்றைய தினம் நடைபெற்றது.

இலங்கையின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவின் அழைப்பின் பேரில், ஜப்பானிய பாதுகாப்பு உயர்மட்டக் குழுவொன்று நேற்று இந்த கலந்துரையாடலில் பங்கேற்றது.

இந்தக் கலந்துரையாடலில் இருதரப்பு மற்றும் பரஸ்பர நலன்கள், முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இலங்கை தரப்பில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன, பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி, இராணுவ, கடற்படை, விமானப்படைத் தளபதிகள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

ஜப்பான் தரப்பில், டோக்கியோவில் யோவில் இருந்து வந்திருந்த, உயர்மட்டக் குழுவினருடன், கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதரக பாதுகாப்பு ஆலோசகர் லெப்.அட்சுகிரோ மொரோரேயும் பங்கேற்றார்.
army-meeting-21-12-2016-2 army-meeting-21-12-2016-3 army-meeting-21-12-2016-4 army-meeting-21-12-2016-5 army-meeting-21-12-2016-6 army-meeting-21-12-2016-1