பெண்கள் குழந்தைகள் பயணித்த முச்சக்கரவண்டி வாவிக்குள் வீழ்ந்து விபத்து – 5 பேர் படுகாயம்

217 0

unnamed-2மட்டக்களப்பு நகரை இணைக்கும் சின்னப்பாலம் வீதியில் பயணித்த முச்சக்கரவண்டியொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வாவிக்குள் வீழ்ந்தில் அதில் பயணித்த சாரதி உட்பட 5 பேர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு நகரிலிருந்து ஏறாவூர் நோக்கி முச்சக்கர வண்டியில் பயணித்த அதன் சாரதி, இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் ஆகியோரே சம்பவத்தில் படுகாயமடைந்ததுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில் சிறு குழந்தைகள் உட்பட வயோதிபப் பெண்ணும் நினைவிழந்த நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் குறித்து மட்டக்களப்பு காவல்துறையினர் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

unnamed-6 unnamed-1 unnamed-2 unnamed-3 unnamed-4 unnamed-5 unnamed-6 unnamed