தேசிய அரசாங்கத்தின் பயணம் தற்காலிகமானது – சாந்த

251 0

shantha-bandaraதேசிய அரசாங்கத்தின் பயணம்; தற்காலிகமானது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

மாத்தறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் சாந்த பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கமும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இருவேறு நிலைகளாகும். அவை இரண்டும் ஒன்றல்ல.

இது குறித்து யாரும் குழப்பமடையத் தேவையில்லை.

ஐக்கிய தேசியக் கட்சியுடனான உடன்படிக்கைகளை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் விரும்புவதில்லை.

கடந்த காலங்களிலும் இவ்வாறான ஒன்றிணைந்த உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன. அவை நிலைபெறவில்லை.

இந்த நிலையில், தற்போது தேசிய அரசாங்கத்தின் உடன்படிக்கையையும் முறித்துக்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சியினர் முயற்சிப்பதாக சாந்த பண்டார குறிப்பிட்டார்.