விசேட கொடுப்பனவு தேவை – அரச பேருந்து தரப்பினர் கோரிக்கை

215 0

mannar_bus_005தனியார் பேருந்து தொழிற்சங்க நடவடிக்கையின் போது, சேவையில் ஈடுபட்ட அரச பேருந்து பணியாளர்களுக்கு விசேட கொடுப்பனவொன்றை வழங்குமாறு ஜனதிபதியிடம் இலங்கை போக்குவரத்து சபை கோரிக்கை விடுத்துள்ளது.

போக்குவரத்து சபையினரால் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

பேருந்து பணியாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் மேலதிக கொடுப்பனவை பெற்றுக்கொடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.

டிசம்பர் இரண்டாம் திகதி தனியார் பேருந்து உரிமையாளர்களால் நாடளாவிய ரீதியிலான தொழிற்சங்க நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த தொழிற்சங்க நடவடிக்கையின்போது, இலங்கை போக்குவரத்து சபை 110 மில்லியன் ரூபாய்களை வருவாயாக ஈட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.