வெளிநாட்டு நாணயத் தாள்களுடன் மூவர் கைது

358 0

arrested-with-us-dollars1ஒரு கோடியே 16 லட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத் தாள்களை வெளிநாட்டுக்கு கடத்திச் செல்ல முயற்சி செய்த வெளிநாட்டவர்கள் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க சர்வதேச வானுர்தி தளத்தில் வைத்து சுங்கவரி திணைக்கள அதிகாரிகளால் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மூவரும் கட்டார் நாட்டிற்கு இந்த பணத்தை கடத்திச் செல்லவிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்டவர்கள் எகிப்து, லெபனான் மற்றும் பலஸ்தீன் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களிடம் இருந்து அமெரிக்க டொலர்கள் மற்றும் யூரோ நாணயத்தாள்கள் மீட்கப்பட்டுள்ளன.