நாடளாவிய ரீதியாக உள்ள 3 ஆயிரத்து 200 பாடசாலைகளில் மது ஒழிப்பு பிரிவுகளை உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டு இந்த செயல்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போதைப்பொருள் பாவனை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியினால் இந்த செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக செயலணியின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.