பெரும்போகத்தில் நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு உரமானியம் வழங்கும் நடவடிக்கை

241 0

22பெரும்போகத்தில் நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு உரமானியம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பமானதை அடுத்து யாழ்ப்பாணம், கம்பஹா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை வைப்புச் செய்யும் பணிகள் கடந்த வியாழக்கிழமை ஆரம்பமானதாக விவசாய அமைச்சின் மேலதிக செயலாளரும் உரச் செயலகத்தின் பதில் பணிப்பாளருமான விஜித்த சந்திர பியத்திலக்க தெரிவித்துள்ளார்.

ஏனைய மாவட்ட விவசாயிகளுக்கு இந்த வாரம் பணம் வைப்புச் செய்யப்படும் என்றும் எதிர்வரும் 31ம் திகதிக்குள் அனைத்து விவசாயகளுக்குமான பணம் வைப்புச் செய்யப்படும் என்று மேலதிக செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

பெரும்போகத்திற்கு போதுமான இரசாயன உரம் நாட்டில் காணப்படுவதாகவும், எனினும் விவசாயிகள் சேதன பசளை பாவனைக்கு பழகியிருப்பதால் இராசாயன பசளை பாவனை குறைவடைந்திருப்பதாக பதில் பணிப்பாளர் பியதிலக்க தெரிவித்தார்.