மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் அமிர்தகழி தூய கப்பலேந்தி அன்னை ஆலய பங்கு மறைக்கல்வி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருடாந்த ஒளிவிழா நிகழ்வு பங்குதந்தை சி.வி.அன்னதாஸ் தலைமையில் ஆலய அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது.
நடைபெற்ற வருடாந்த ஒளிவிழா நிகழ்வில் மறைக்கல்வி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கிறிஸ்து பிறப்பு ஒளிவிழா கலை நிகழ்வுகள்நடைபெற்றன.
இதனை தொடர்ந்து மறைக்கல்வி பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு ஒளிவிழா நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகளால் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு சிறிய குருமட துணை அதிபர் அருட்பணி ஜெரிஸ்டன் வின்சென், பெரிய உப்போடை மரியாயின் பிரான்சிஸ்கன் மறைபரப்பு கன்னியர்மட அருட்சகோதரிகள், மறைக்கல்வி பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கு மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.