ஞானசார தேரரிடம் வாக்குமூலம்!

271 0

therar-5பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரிடம் நேற்றைய தினம் பொலிஸார் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

கடந்த மாதம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, “அல்ஹா”என்ற வார்த்தையை அவமதித்த குற்றத்திற்காகவே இவரிடம் வாக்குமூலம் ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞானசார தேரரிடம் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெறப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தேரருக்கு எதிராக கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலியே முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.