வடக்கிலுள்ளவர்கள் படகு மூலம் இந்திய செல்ல வாய்ப்பு

273 0

aambal-blogஇந்தியாவில் நடைபெறுகின்ற இந்து மத வழிபாடுகளில் இலங்கை – வடக்கில் உள்ள பக்தர்கள் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் தலையீட்டால் வடக்கிலுள்ள தமிழர்கள் படகு மூலம் இந்தியா செல்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஜனவரி மாதம் 01ம் திகதி முதல் 12ம் திகதி வரையில் இந்த மத நிகழ்வுகள் இடம்பெற இருப்பதுடன் வடக்கிலுள்ள சுமார் 2000 பக்தர்கள் கலந்துகொள்ள எதிர்பார்த்துள்ளனர்.
பாதுகாப்பு அமைச்சு மற்றும் கடற்படையிடம் வட மாகாண ஆளுநர் இது தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளதுடன்இ அதன்படி படகு மூலம் அவர்கள் பயணிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.