மஹிந்தவிற்கும், லசந்தவிற்கும் இடையிலான இரகசிய தொலைபேசி உரையாடல்!

389 0

160801084407_mahinda_512x288__nocreditமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும், கொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் பிரபல ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவிற்கு இடையிலான இரகசிய தொலைபேசி உரையாடல் பதிவை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.

குறித்த உரையாடலை வைத்து பார்க்கும் போது இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், கடந்த 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08ஆம் திகதி லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்ட போது மஹிந்தவே ஜனாதிபதியாக இருந்துள்ளார்.

இதேவேளை, லசந்த விக்ரமதுங்க கொலையாளியை இனங்காண்பதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியினை கோரியுள்ளனர்.பிரபல ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரின் புகைப்படம் போன்ற மாதிரி ஓவியப்படம் ஒன்றை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

இந்த சந்தேகநபர், 35 வயதுடையவர் என்றும், தடித்தும் 5.8′ அடி உயரமான மனிதர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அத்துடன் கொலை சம்பவத்தை நேரில் பார்வையிட்ட சாட்சியங்கள் தெரிவித்த விளக்கங்களின் அடிப்படையில் இந்த மாதிரி ஓவியப்படம் ஒரு கலைஞரால் வரையப்பட்டுள்ளது என பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த மாதிரி சித்திரத்தின் அடிப்படையில், சந்தேகநபர் பற்றிய தகவல் தெரிந்தால் 071-8305528, 071-8349505, 077-3291500, 071-8070207 அல்லது 011-2422176, 011-2380380 என்ற இலக்கங்களுக்கு அழைப்பினை மேற்கொண்டு தெரிவிக்கவும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த பிரேமானந்த உடலாகம பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/watch?v=IfRKK11Dw0M